35 நிமிடங்களில் 3 கிலோ கோழியை சாப்பிட பெண்!
தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் உள்ள உணவகம் ஒன்றில் நடத்தப்பட்ட கோழிச் சோறு போட்டியில் தைவான் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த போட்டியில் ஜாய் வெய் கூ என்ற பெண்மணியே 3 கிலோகிராம் கோழிச் சோற்றை 35 நிமிடங்களில் உண்டு வெற்றி பெற்றுள்ளார்.
போட்டியில் வெற்றி பெறவேண்டுமாயின் 2 கிலோகிராம் சோற்றையும் 1 கிலோகிராம் வேகவைத்த கோழியையும் 1 மணிநேரத்திற்குள் உண்டு முடிக்கவேண்டும்.
அதற்குப் பரிசாக அவருக்குப் பெரிய தட்டு ஒன்று வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு குறித்த போட்டியில் ஜாய் வெய் கூ 3 கிலோ கிராம் கோழி சோற்றினை வெறும் 35 நிமிடங்களில் உண்டு முதல் பரிசினை தட்டி சென்றமை அனைவராலும் பார்ப்பட்டு வருகின்றது.
குறித்த போட்டியானது 10 வருடங்களுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட சவாலாகவும் அதில் 37 வது வெற்றியாளராகத் ஜாய் இடம்பிடித்துள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.