தலிபான் ஆட்சியில் பெண்களின் நிலை என்னவாகும்; மலாலா கவலை
ஆப்கானிஸ்தான் தலிபான்கள் வசமான நிலையில் அங்குள்ள பெண்கள் தொடர்பில் நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai)தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் , தற்போது ஆப்கானிஸ்தானை ஆளும் பயங்கரவாதக் குழுவுடன் தனக்கு ஏற்பட்ட சோதனையையும் விவரித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
போஸ்டனில் இருந்து ஆப்கானிஸ்தானின் முன்னேற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், 2012 ஆம் ஆண்டு ஒக்டோபரில் பாடசாலைக்கு செல்லும் வழியில் பாகிஸ்தானிய தலிபான் பயங்கரவாதியால் நிகழ்த்தப்பட்ட குண்டுவெடிப்பால் தனது முகத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஒரு இடுகையில் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் முற்றுகை காரணமாக பல பெண்கள் மோசமான தலைவிதியை சந்திக்க நேரிடும் என்றும் மலாலா கவலை வெளியிட்டுள்ளார். ஆப்கானிஸ்தான் நிலைமை தொடர்பில் தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பலருடன் கலந்துரையாடினேன்.
உலகெங்கிலும் உள்ள தலைவர்களுக்கு கடிதங்கள் எழுதினேன், ஆப்கானிஸ்தானில் உள்ள பெண்கள் உரிமை ஆர்வலர்களுடன் பேசினேன். கடந்த இரண்டு வாரங்களில், அவர்களில் பலருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் பாதுகாப்பான இடத்திற்கு எங்களால் உதவ முடிந்தது.
ஆனால் அனைவரையும் காப்பாற்ற முடியாது என்று எனக்குத் தெரியும், என்றும் மலாலா(Malala Yousafzai) கூறினார்.
இதேவேளை ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளதையடுத்து அங்கு பெண்களின் உரிமைகள் குறித்து உலகளவில் பரவலான கவலையை உருவாக்கி வருகிறது.
கடந்த 1996 முதல் 2001 வரையிலான தலிபான்கள் ஆட்சியின் போது, ஆப்கானிஸ்தான் பெண்கள் பயங்கரவாதக் குழுவின் பிற்போக்குத்தன ஆட்சியால் பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் , ஆப்கானை கைப்பற்றிய தலிபான் அரசாங்கம் ஆப்கானிஸ்தான் அரசின் பெண் தொழிலாளர்களை மறு அறிவித்தல் வரும் வரை வீட்டிலேயே இருக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.