கனடாவில் நடந்து சென்றுகொண்டிருந்த ஹிஜாப் அணிந்த சகோதரிகள் சந்தித்த பயங்கர சம்பவம்: பயத்தில் தோழிகள்
கனடாவின் ஆல்பர்ட்டாவில், நடந்து சென்றுகொண்டிருந்த சகோதரிகளான இஸ்லாமிய பெண்கள் இருவர், கத்தியுடன் வந்த ஒரு மர்ம நபரால் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தங்கள் 20 வயதுகளிலிருக்கும் சகோதரிகளான இரு இளம்பெண்கள், கடந்த புதன்கிழமை மதியம் 12.30 மணியளவில் ஆல்பர்ட்டாவில், எட்மண்டனின் வடமேற்கில் உள்ள ஒரு பாதை வழியாக நடந்து வந்துகொண்டிருந்திருக்கிறார்கள்.
அப்போது முகமூடி அணிந்த ஒருவர் அவ்வழியாக வந்திருக்கிறார். அவர் இந்த பெண்களைப் பார்த்ததும், இனரீதியாக அவர்களைப் பார்த்து கத்திக்கொண்டே வந்திருக்கிறார். ஒரு பெண்ணை, அவர் தலையில் அணிந்திருந்த ஹிஜாபை பிடித்து இழுத்து அவர் கீழே தள்ள, அந்த பெண் மயக்கமடைந்துள்ளார்.
பிறகு கத்தி ஒன்றை எடுத்த அந்த நபர், அதைக்கொண்டு அந்த இரண்டாவது பெண்ணை அடித்துக் கீழே தள்ளி, அவரது கழுத்தில் கத்தியை வைத்து இனரீதியாகவும், மத ரீதியாகவும் அவரை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
Not only am I heartbroken I am infuriated. I can say that this is completely unacceptable and it obviously is, but everyone needs to say it. #stalbert needs to be a safe place for all.
— Cathy Heron (She/Her) (@CathyHeron) June 24, 2021
Hate laws in Canada need to be stronger.
The roar of outrage needs to be loud. pic.twitter.com/bipdC5tK56
பின்னர் அங்கிருந்து ஓடி மறைந்திருக்கிறார் அவர். ஒரு பெண் மயக்கமாகிவிட்ட நிலையில், அடுத்த பெண் நடுங்கிப்போயிருக்க, மயக்கமடைந்த பெண் சுயநினைவடைந்ததும் அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார், இரண்டாவது பெண்ணுக்கு லேசான காயங்கள் என்பதால், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படவில்லை.
இந்த சம்பவம் ஆல்பர்ட்டாவில் பெரும் பரபரப்பையும் கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. தாக்கப்பட்ட அந்த இளம்பெண்களின் தோழிகளான Houda Alkasmம் Nesrine Merhi-Tarrabainம் கூறும்போது, தாங்கள் இந்த சம்பவத்தால் ஆடிப்போய்விட்டதாக தெரிவித்துள்ளார்கள். பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக, 50 வயது மதிக்கத்தக்க, வெள்ளையின நபர் ஒருவரைத் தேடி வருகிறார்கள்.