பணக்கார நாடுகளிடம் உலக சுகாதார நிறுவனம் முன்வைத்த கோரிக்கை
பணக்கார நாடுகள் தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் கோரிக்கை முன்வைத்துள்ளது. இது தொடர்பில் உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் ஆதனம்(Tedros Adhanom) நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில், கொரோனா தடுப்பூசிகளை அதிக அளவில் வாங்கியுள்ள சில பணக்கார நாடுகள், தொற்று அபாயம் குறைவாக கொண்டவர்களான குழந்தைகளுக்கும், வளர் இளம்பருவத்தினருக்கும் தடுப்பூசி போட்டு வருகின்றன. அதற்கான காரணம் எங்களுக்கு புரிகிறது.
இருப்பினும், அந்த நாடுகள் தங்கள் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுவதற்கு பதிலாக, உலகம் முழுவதும் தடுப்பூசி வினியோகம் செய்யும் ‘கோவேக்ஸ்’ அமைப்புக்கு தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்க வேண்டும் எனவும் அவர் கூறினார்.