நைஜீரிய தேவாலயத்தில் ஆயுததாரிகளின் வெறியாட்டம்
நைஜீரியாவின் தேவாலயெமொன்றில் ஆயுததாரிகளினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
நைஜீரியாவின் ஒன்டோவில் அமைந்துள்ள புனித பிரான்ஸிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஞாயிறு ஆராதணைகளில் பங்கேற்றிருந்த பக்தர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
சிறுவர்கள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுததாரிகள் துப்பாக்கிச் சூடு நடாத்தியதுடன், குண்டுத் தாக்குதலும் நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த தாக்குதலுக்காக காரணங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை என்பதுடன், தாக்குதலுக்கு எவரும் உரிமை கோரவில்லை.
ஐந்து பேர் அடங்கிய ஆயுத கும்பலொன்று இந்த கொடூரத் தாக்குதலை மேற்கொண்டதாக நேரில் கண்ட சாட்சியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்தை வன்மையாக கண்டிப்பதாக ஜனாதிபதி மொஹமது புஹாரி தெரிவித்துள்ளார்.
தாக்குதலில் சுமார் 20 பேர் வரையில் உயிரிழந்திருப்பதாக உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.