யாழின் சந்நிதியான் புகழ் பாடும் தொண்டைமானாறு!
தொண்டைமானாறு இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள வடமராட்சியின் பிரதேசங்களில் ஒன்று.கடலுடன் கலக்கும் தொண்டைமானாறு நீரேரி ஆனையிறவு முதல் நீண்டுள்ளது.
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயம் இங்கு அமைந்துள்ளது. செல்வச்சந்நிதியில் ஓடும் நன்னீரேரி வல்லிநதி என்று முன்னர் அழைக்கப்பட்டது. இப்பிரதேசத்தின் ஒரேயொரு பாடசாலையாக தொண்டைமானாறு வீரகத்திப்பிள்ளை மகாவித்தியாலயம் அமைந்துள்ளது.
இது ஆரம்பித்து நூறாண்டுகள் கடந்த பாடசாலையாகும்.
இதன் தாபகர் திரு சி. வீரகத்திப்பிள்ளை ஆவார். சங்கிலியன் ஆட்சிக்காலத்துடன் தொடர்புபட்ட வரலாற்று முக்கியத்துவம் மிக்க சில எச்சங்கள் இன்றும் இப்பிரதேசத்திலும் அயற்பிரதேசத்திலும் உள்ளன.
அவற்றுள் முக்கியமானவை,கெருடாவில் வீரமாகாளிஅம்மன் ஆலயம்,காட்டுப்புலம் கோட்டைகாடு,கெருடாவில் மண்டபக்காடு,தொட்டிலடி,கந்தசுவாமி கோயில் ஆகியவை ஆகும்.
மேலும் கப்பல் கட்டும் தொழில் இப்பிரதேசத்தின் பண்டைய சிறப்புப் பெற்ற தொழிலாக இருந்துள்ளது.