இளம்பெண்ணின் பாலியல் வழக்கில் அநீதி இழைத்த நீதிபதிகள்....ஆத்திரமடைந்த பொதுமக்கள்
இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த இருவருக்கு சார்பாக நீதிபதி பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை 17 மற்றும் 32 வயதுடைய போர்ச்சுக்கீசியர்கள் இருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்.
இதனையடுத்து அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி 32 வயதுடைய நபருக்கு 51 மாதகாலம் சிறை தண்டனை விதித்து தீர்பளித்துள்ளார்.
ஆனால் அவர் இதனை மறுத்து மேல்முறையீடு செய்ததில் அவருக்கு தண்டனை 36 மாதங்களாக குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த வழக்கில் இன்னும் 17 வயது இளைஞனுக்கு தீர்ப்பு வழங்கவில்லை.
மேலும் மற்றொரு போர்ச்சுக்கீசியரின் தண்டனையை குறைப்பதற்காக மக்கள் ஆத்திரம் அடைந்துள்ளனர். இந்த தீர்ப்பு குறித்து நீதிபதி கூறுகையில் "அந்த பெண் 11 நிமிடங்கள் மட்டுமே வன்புணர்த்தப்பட்டுள்ளார்.
அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. இதுமட்டுமின்றி அந்த இளம்பெண் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு மறைமுகமாக செய்கை கொடுத்துள்ளார். மேலும் அந்தப் பெண் இரவு விடுதிக்குச் சென்ற போது வேறொரு ஆணுடன் கழிவறைக்கு சென்றுள்ளார்.
இதனை குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறாக புரிந்துகொண்டு அந்த பெண்ணின் வீடு வரை சென்று அவரை பாலியல் தாக்குதல் செய்துள்ளார்கள். மேலும் 11 நிமிட வன்புணர்தல் என்பது மிகவும் குறைவானது." என்று நீதிபதி கூறி அந்தபெண்ணிற்கு அநீதியான தீர்ப்பை அளித்துள்ளார்.
இந்த தீர்ப்பை கண்ட மக்கள் நீதிமன்றத்தின் முன் 11 நிமிடங்கள் மௌனமாக நின்று தங்களின் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து சமுதாயத்திற்கு இது மாதிரியான ஒரு தவறான செய்தியை நீதிபதி தெரிவித்துள்ளார்.
இதனால் வருங்காலத்தில் இளம் பருவத்தினர் குற்ற செயல்பாடுகளில் ஈடுபடும் பொழுது இந்த வழக்கை சுட்டிக்காட்டி தண்டனையிலிருந்து தப்பிக்க நேரிடும்.
குறிப்பாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை போன்ற வழக்கறிஞராக வரும் நடிகர் அஜித் கூறும் 'a no is a no' வாதத்தை முன்வைத்த பாதிக்கப்பட்ட இளம் பெண்ணின் வழக்கறிஞர் வாதாடியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "எனக்கு இது ஏமாற்றத்தை தந்துள்ளது. இதனை நான் அப்படியே விடப்போவதில்லை" என்று அவர் கூறியுள்ளார்.