பிரித்தானியாவில் திருமணமான சில வாரங்களில் மரணித்த இளம் கோடீஸ்வரர்
லண்டனில் இளம் கோடீஸ்வரர் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சி தலைவர்களுடன் நெருங்கிய நட்பைக் கொண்ட இளம் கோடீஸ்வரர் விவேக் சாதா(Vivek Chadha).
இவர் பல பில்லியன் மதிப்பிலான NIne Group ஹோட்டல் நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 8 வாரத்திற்கு முன்பு தான் இவருக்கு Chadha (29) என்ற பெண்ணுடன் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை இரவு Annabel's night club பார்ட்டியில் கலந்துகொண்ட இவர் மறுநாள் அவருடைய முகவரியில் இறந்து கிடந்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து பேசிய விவேக் அவர்களது மனைவி கூறியதாவது, "நடந்ததை விவரிக்க தன்னிடம் வார்த்தை இல்லை. திருமணம் முடிவுற்ற 8 வாரங்களில் எனது வாழ்க்கை இவ்வாறு தலைகீழாக மாறியதன் காரணமாக மிகவும் மனமுடைந்துள்ளேன்" என வேதனையுடன் கூறியுள்ளார்.
மேலும் அவரது உடலைப் பிரேத பரிசோதனை செய்ததில் vivek அவர்களுக்கு உடலில் எந்த பிரச்சினையும் இல்லை என தெரியவந்துள்ளது. அதே சமயம் அவர் தன்னுடைய முகவரியில் இல்லாமல், வேறொரு இடத்தில் இறந்ததாகவும் தகவல் வெளியாகின்றன.
இதனால் உண்மை நிலவரம் இதுவரை வெளியாகவில்லை.
அவரது நண்பர்கள் கூறியதாவது, விவேக் மறைடைப்பால் இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017 இல், இளம் தொழில் முனைவோருக்கான 'Rising Star' விருதையும் பெற்றார். இதனை தொடர்ந்து, கடந்த 2012 இல் தனது தந்தையுடன் இணைந்து Nine Group நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.