முன்னாள் பிரதமர் இம்ரான்கான் உட்பட 27 பேரின் யூடியூப் தளங்களுக்கு தடை!
பாகிஸ்தானில் சமீப காலமாக அரசாங்கத்தின் கொள்கைகளை சமூக வலைதளங்களில் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
குறிப்பாக, அரச அதிகாரிகளை அச்சுறுத்தும் வகையில் பதிவுகளை பதிவிட்டனர்.
இதனால் அரசின் செயற்பாடுகள் பாதிக்கப்படுவதாக கூறப்பட்டு வந்த நிலையில் குறித்த யூடியூப் தளங்களுக்கு தடைசெய்ய வேண்டும் என நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இதனையடுத்து பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் மற்றும் பத்திரிகையாளர்கள் உட்பட 27 பேரின் யூடியூப் தளங்களுக்கு இடைக்கால தடை விதித்து இஸ்லாமாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதனை மீறி அரசினை விமர்சித்தால் அந்த யூடியூப் தளங்கள் நிரந்தரமாக முடக்கப்படும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து வழக்கின் விசாரணை அடுத்த மாதம் 21-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.