மாணவர்களுக்கு நிகழ்நிலையில் உரையாற்றும் உக்ரைன் ஜனாதிபதி
கனேடிய பல்கலைக்கழக மாணவர்களுக்கு மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக உக்ரைன் ஜனாதிபதி வெலாடிமிர் செலன்ஸ்கீ உரையாற்ற உள்ளார்.
உக்ரைனுக்கு எவ்வாறு உதவுவது என்பது குறித்து இந்த உரையில் தெளிவுபடுத்த உள்ளார்.
றொரன்டோ பல்கலைக்கழகம் உள்ளிட்ட 11 பல்கலைக்கழக மாணவர்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.
ரஸ்யா தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு கனேடிய பல்கலைக்கழகங்கள் எவ்வாறு உதவ முடியும் என்பது குறித்து இந்த உரையில் தெளிவுபடுத்த உள்ளார்.
இந்த நிகழ்வில் கனடாவின் பிரதிப் பிரதமர் கிறிஸ்டியா ப்ரீலாண்டும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உக்ரைன் மாணவர்களுக்கு கனேடிய பல்கலைக்கழகங்கள் உதவிகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.