மெக்ஸிக்கோவில் மதுபான நிலையங்களில் துப்பாக்கிச் சூடு: 11 பேர் பலி
மெக்ஸிக்கோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
வட மத்திய மெக்ஸிக்கோவின் இரண்டு மதுபான நிலையங்களில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் எட்டு பெண்களும் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டு போதைப் பொருள் கும்பல்களுக்கு இடையிலான மோதலின் தொடர்ச்சியாக இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
பத்து பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கிச் சூடு இடம்பெற்ற இரண்டு மதுபான நிலையங்களிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அதற்கான காரணத்தை எழுதி வைத்திருந்தனர் என தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் என்ன எழுதப்பட்டது என்பது பற்றிய விபரங்களை பொலிஸார் வெளியிடவில்லை.
உயிரிழந்தவர்கள் மதுபானசாலை பணியாளர்களா அல்லது வாடிக்கையாளர்களா என்பது பற்றிய விபரங்களும் வெளியிடப்படவில்லை.