ரஷ்யாவின் தாக்குதலில் 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழப்பு! வெளியான பகீர் தகவல்
உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போரில் 13 ஆயிரம் உக்ரைன் வீரர்கள் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 மாதங்களை கடந்தும் முடிவில்லாமல் நீண்டு வருகிறது.
இந்த போரில் உக்ரைன் மற்றும் ரஷ்யா என இருதரப்பு இராணுவமும் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றன.
இந்த நிலையில் போர் தொடங்கியதில் இருந்து இப்போது வரை சுமார் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியின் மூத்த ஆலோசகரான மைக்கைலோ போடோலியாக் இதுபற்றி தெரிவிக்கையில்,
"மூத்த ராணுவ அதிகாரிகளிடம் இருந்து அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்கள் கிடைத்துள்ளன. அதன்படி 10 ஆயிரம் முதல் 13 ஆயிரம் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
"USA asks Putin for negotiations". Ru-propaganda creates fake universe around Russia: rewrote quote, came up with news and are happy about it. Announcement of RF president as Master of the Galaxy is next – like Kim Jong-un. World works differently: nothing about 🇺🇦 without 🇺🇦
— Михайло Подоляк (@Podolyak_M) December 2, 2022
காயமடைந்த துருப்புகளின் எண்ணிகையும் கணிசமாக உள்ளது. பொதுமக்கள் உயிரிழப்பு எண்ணிக்கை குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது" என்றார்.