போரில் வெடிக்காத குண்டுகளை அகற்றும்போதும் குண்டுவெடிப்பு ; 14 ஈரானிய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய படைகள் வீசியதாகக் கூறப்படும் வெடிக்காத நிலையில் உள்ள குண்டுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் வெடிப்பில் 14 ஈரானிய ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவம் ஈரானின் ஜான்ஜன் நகருக்கு அருகே இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இந்த வெடிப்பில் காயமடைந்த இரு வீரர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது.

போர் நிறுத்தம் அமலுக்கு வந்த பின்னரும், நிலத்தில் புதைந்து கிடக்கும் வெடிக்காத குண்டுகள் தொடர்ந்து அச்சுறுத்தலாக உள்ளன.
இதுவரை சுமார் 15,000-க்கும் மேற்பட்ட குண்டுகளை ஈரான் ராணுவம் செயலிழக்கச் செய்திருந்தாலும், மீதமுள்ளவை ஆபத்தை ஏற்படுத்தி வருகின்றன.
சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட கிளஸ்டர் குண்டுகள் இந்த மீட்பு நடவடிக்கைகளில் பெரும் சவாலாகவும், உயிரிழப்புகளுக்கு முக்கிய காரணமாகவும் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ஏப்ரல் 8ஆம் திகதி முதல் போர் நிறுத்தம் அமலில் இருந்தபோதிலும், இந்தச் சம்பவம் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் மேலும் பதற்றத்தை உருவாக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.