வெளிநாடொன்றில் படகு கவிழ்ந்து 15 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழப்பு!
நைஜீரியாவில் வடமேற்கு மாநிலமான சொகோடோ அருகே படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதுடன், பலர் மாயமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சொகோடோ அருகே இருக்கும் பகுதி ஒன்றில் விறகு சேகரிக்க 20-க்கும் மேற்பட்டோர் படகில் சென்றுள்ளனர்.
குறித்த படகில் சிறுவர் குழுந்தைகள் உள்ளிட்டோரும் பயணம் செய்துள்ளனர்.
இவ்வாறான நிலையில், குறித்த படகு ஆற்றின் நடுவே சென்றுக்கொண்டிருந்த போது கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் 13 சிறுமிகள், 2 சிறுவர்கள் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளன.
இதேவேளை, பெருமளவிலானோர் காணாமல் போயுள்ள நிலையில், உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் அஞ்சப்படுகிறது.
மீட்பு பணியாளர்கள் களப்பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.