மனைவி பிரிந்த சோகம்; 18 பெண்களை கொடூர கொலை செய்த கொலையாளி!
இந்தியாவின் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சமீபத்தில் இரண்டு பெண்கள் கொலை செய்யப்பட்டமை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையின் அடிப்படையில், ஐதராபாத்தை சேர்ந்த மைனா ராமுலு என்பவரை பொலிசார் கைது செய்தனர்.
அந்த நபர் மீது ஏற்கனவே 16 கொலை வழக்குகள் உட்பட 21 வழக்குகள் உள்ளன. இந்நிலையில் பொலிசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் தனது மனைவி பிரிந்து சென்ற பிறகு, ஆத்திரத்தில் தொடர் கொலைகளை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.
பெண்களை ஏமாற்றி அவர்களின் வீட்டுக்கு செல்லும் மைனா ராமுலு, அவர்களுடன் மது அருந்திய பின் அவர்களை கொலை செய்து வந்தது தெரியவந்துள்ளதாக ஐதராபாத் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2003ம் ஆண்டு முதல் அந்த நபர் 18 பெண்களை கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ள பொலிசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.