கனடிய மக்களின் சுகாதாரம் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்
கனடாவில் பெரும்பாலான வயது வந்தவர்கள் உடல் எடை கூடியவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பெரும்பாலான வயது வந்தவர்கள் தற்போது அதிக எடை அல்லது உடல் பருமன் நிலையில் உள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் அண்மையில் வளெியிட்ட தகவல்களின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
2022 முதல் 2024 வரையிலான காலத்தில், 18 முதல் 79 வயதுக்குட்பட்ட கனடியர்களில் 68 வீதமானவர்கள் அதிக எடை அடங்கியதாக அறிக்கை தெரிவிக்கிறது.
இது, கோவிட் பெருந்தொற்றுநோய்க்கு முன்பாக (2016–2019) இருந்த 60% வீதத்திலிருந்து குறிப்பிடத்தக்க உயர்வாகும்.
பெருந்தொற்றுநோய்க்குப் பிறகு வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள், உடல் இயக்கம் குறைதல் மற்றும் அமர்ந்திருக்கும் பழக்கங்கள் அதிகரித்தல், ஆகியவை பெருந்தொப்பை அதிகரிக்க காரணமாக இருக்கலாம் புள்ளி விபரத் தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், வயிற்றுப் பகுதியில் கொழுப்பு அதிகரிப்பு பரவலாக உள்ளது என்றும் ஆய்வு கண்டறிந்துள்ளது.
49 வீதமான கனடியர்களின் இடுப்பு அளவு, சுகாதார ஆபத்துகளுடன் தொடர்புடைய அளவை மீறியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.