சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த இருவர் கைது
கனடாவிலிருந்து, சட்டவிரோதமான அடிப்படையில் அமெரிக்காவிற்கு பிரவேசிக்க முயற்சித்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் இத்தாலிய பிரஜைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச ரயில் பாதை பாலத்திற்கு அருகாமையில் காணப்படும் கடவையில் வைத்து இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்பு அதிகாரிகளும் அமெரிக்க எல்லை பாதுகாப்பு முகவர் நிறுவன அதிகாரிகளும் கூட்டாக இணைந்து இந்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
ஒன்றாரியோவில் இருந்து நியூயோர்க் செல்வதற்கு இந்த நபர்கள் முயற்சித்துள்ளனர்.
37 வயதான ராபெல் காம்பினோ மற்றும் 60 வயதான களாக்ரோ அனாசெச்சி ஆகிய இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.