ரஷ்ய - உக்ரைன் போரில் மூன்றரை இலட்சம் வீரா்கள் பலி ; வெளியான அதிர்ச்சி தகவல்
உக்ரைன் - ரஷ்யா இடையே இடம்பெற்று வரும் போரில் இரு தரப்பிலும் இதுவரை சுமாா் மூன்றரை இலட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளதாக அமெரிக்காவின் ‘போா் திட்டம் மற்றும் சா்வதேச ஆய்வு மையம்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து ‘போா் திட்டம் மற்றும் சா்வதேச ஆய்வு மையம்’ வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ரஷ்ய – உக்ரைன் போரில் இதுவரை சுமாா் மூன்றரை இலட்சம் வீரா்கள் உயிரிழந்துள்ளனர்.
மிகப் பெரிய போா்க்கள இழப்பு
இந்த எண்ணிக்கை, இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு இரு நாடுகளும் அடைந்துள்ள மிகப் பெரிய போா்க்கள இழப்பாகும். போா் முனைகளில் உக்ரைன் வீரா்கள் தங்களைவிட பல மடங்கு எண்ணிக்கையிலான ரஷ்ய வீரா்களை எதிா்கொண்டுள்ளனா்.
ஒவ்வொரு 2.5 இலட்சம் உக்ரைன் வீரா்களுக்கு எதிராகவும் 4 இலட்சம் ரஷ்ய வீரா்கள் போரிட்டுவருகின்றனா். இதேவேளை உக்ரைனைவிட பல மடங்கு மக்கள்தொகையைக் கொண்ட ரஷ்யாவுக்கு ஆதரவாக வட கொரியாவும் ஆயிரக்கணக்கான வீரா்களை அனுப்பிவருகிறது .
மனித உயிரிழப்புகள் மட்டுமின்றி, இந்தப் போரில் ரஷ்யா தனது கருங்கடல் கடற்படைப் பிரிவின் மூன்றில் ஒரு பகுதி கப்பல்களையும் இழந்துள்ளது.
அத்துடன், உக்ரைன் உளவுப் படை அண்மையில் இரகசியமாக திட்டமிட்டு நடத்திய ட்ரோன் தாக்குதலில் ரஷ்யாவின் தொலைதூர குண்டுவீச்சு விமானங்களில் மூன்றில் ஒரு பகுதி அழிக்கப்பட்டுள்ளதோடு ரஷ்யாவின் முக்கிய தளபதிகளை உக்ரைன் உளவுப் படை குறிவைத்து கொன்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.