கனடா அமெரிக்க எல்லையில் பலியான இந்தியர்கள்: மூன்று பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

Canada
By Balamanuvelan May 06, 2023 09:53 AM GMT
Report

கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக மீட்கப்பட்ட இந்தியர்கள் குறித்த செய்தி நினைவிருக்கலாம்.

30.3.2023 அன்று, பிரவீன் சௌத்ரி (50), அவரது மனைவியான தீக்‌ஷா சௌத்ரி (45), தம்பதியரின் பிள்ளைகளான விதி சௌத்ரி (23) மற்றும் மித் சௌத்ரி (20) என்னும் இந்தியர்கள், மற்றும், ரோமேனிய வம்சாவளியினரான Florin Iordache (28), Cristina Zenaida Iordache (28), அவர்களுடைய குழந்தைகள் இருவர், என எட்டு பேர் கனடா அமெரிக்க எல்லையில் சடலங்களாக மீட்கப்பட்டார்கள்.

மூன்று பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு

இந்நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மூன்று பேர் மீது இந்திய பொலிசார் குற்றச்சாட்டுகள் பதிவு செய்துள்ளார்கள். 

அவர்களில், Nikulsinh Shamaruji Vihol மற்றும் Arjunsinh Ranjitsinh Chavada ஆகியோர் இந்தியாவில் இருக்கிறார்கள். மூன்றாவது நபரான Sachin Gajendrasinh Vihol கனடாவில் இருப்பதாக கருதப்படுகிறது. 

கனடா அமெரிக்க எல்லையில் பலியான இந்தியர்கள்: மூன்று பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு | 3 Charged In India Canada News

Ryan Remiorz/The Canadian Press

விடயம் என்னவென்றால், இதுவரை இவர்களில் யாரும் கைது செய்யப்படவும் இல்லை, கனடா பொலிசார் இவர்கள் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யவும் இல்லை.

பிரவீன் சௌத்ரியின் சகோதரர் தெரிவித்துள்ள புதிய தகவல்

இதற்கிடையில் பிரவீன் சௌத்ரியின் சகோதரரான அஷ்வின்பாய் சௌத்ரி (Ashvinbhai Chaudhary) சில புதிய தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதாவது, தன் சகோதரர் பிரவீன் சௌத்ரியின் குடும்பம் கனடாவுக்குச் சென்றிருந்த நிலையில், Nikulsinh Shamaruji Vihol என்பவர், 100,000 கனேடிய டொலர்கள் கொடுத்தால், பிரவீன் குடும்பத்தை தன்னால் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கமுடியும் என்று கூறியதாக தன் சகோதரர் பிரவீன் கூறியதாக தெரிவித்துள்ளார்.

அதன்படி பிரவீன் தன் சகோதரர் அஷ்வின்பாயிடம் பண உதவி கோர, அவர் நண்பர்கள், உறவினர்கள் மற்றும் வங்கிக்கடன் மூலம் பணம் திரட்டி, அதை தன் சகோதரர் கூறியபடி, Nikulsinh Vihol மற்றும் Arjunsinh Ranjitsinh Chavada ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.

கனடா அமெரிக்க எல்லையில் பலியான இந்தியர்கள்: மூன்று பேர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு | 3 Charged In India Canada News

HO-Mehsana Police/The Canadian Press

அதைத் தொடர்ந்து கனடாவிலிருக்கும் Sachin Vihol, பிரவீன் குடும்பத்தை வின்னிபெக்கிலிருந்து மனித்தோபாவுக்கு விமானத்தில் அனுப்பிவைத்துள்ளார்.

பல நாட்கள் பல இடங்கள் மாறி, கடைசியாக கார் ஒன்றில் கனடா அமெரிக்க எல்லையைக் கடக்கலாம் என கூறிவிட்டு, கடைசி நேரத்தில் குறுக்கு வழியாக ஏழு அல்லது எட்டு நிமிடத்தில், படகு ஒன்றில் ஆற்றைக்கடந்து சென்று விடலாம் என Sachin Vihol கூறியுள்ளார்.

இந்த தகவல்கள் அனைத்தையும் தன் சகோதரர் மொபைல் மூலம் தனக்குத் தெரியப்படுத்தியதாக கூறும் அஷ்வின்பாய், கடைசியில் அவர்களும் அந்த ரொமேனியக் குடும்பமும் படகில் புறப்படும்போது வானிலை மோசமாக இருந்ததால், அந்த ரொமேனியக் குடும்பம் பயணத்தை ரத்து செய்துவிடலாம் என கூறியும், இன்று புறப்படாவிட்டால், இதற்குப் பின் புறப்படுவது கஷ்டம் என்று கூறி, Sachin Vihol வற்புறுத்தி எட்டு பேரையும் படகில் ஏற்றி அனுப்பியதாக தெரிவித்துள்ளார்.

பின்னர், தன் அண்ணன் குடும்பம் குறித்து விசாரிக்க Nikulsinh Viholஐ மொபைலில் தொடர்புகொண்டுள்ளார் அஷ்வின்பாய். அப்போது, பிரவீன் மற்றும் அவரது குடும்பம் அமெரிக்காவுக்குள் நுழையும்போது, அவர்களை அமெரிக்க பொலிசார் கைது செய்துவிட்டதாக தெரிவித்துள்ளார் Nikulsinh Vihol.

அதற்குப் பிறகு அவரை மொபைலில் தொடர்புகொள்ள முடியவில்லை. ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி, தன் சகோதரர் குடும்பம் தண்ணீரில் மூழ்கி இறந்துவிட்ட விடயத்தை தொலைக்காட்சி செய்தி மற்றும் சமூக ஊடகங்கள் மூலமாகத்தான் தெரிந்துகொண்டுள்ளார் அஷ்வின்பாய்!

மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US