டொரண்டோவில் கொள்ளையுடன் தொடர்புடைய ஒருவரை தேடும் பொலிஸார்
டொரண்டோவில் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
நகரத்தின் கிழக்குப் பகுதியில் இந்தக் கொள்ளைச் சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளதாக கூறப்படுகின்றது.
மேலும் குறித்த நபர் மிரட்டல் மற்றும் தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
க்யூன் ஸ்ட்ரீட் ஈஸ்ட் மற்றும் ப்ராட்வியூ அவென்யூ அருகிலுள்ள பகுதியில் அவசர அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, பாதிக்கப்பட்ட நபருக்கு பழக்கமுள்ள ஒருவரே, சட்டவிரோதமாக ஒரு அபார்ட்மெண்டில் மூன்று முறை புகுந்து, சொத்துகளை திருடி, தொடர்ந்து மிரட்டல், தொல்லை மற்றும் தாக்குதல் செய்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
இந்த வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர் பீட்டர் நொவாசெக் (Peter Nowaczek), 30 வயது, டொரண்டோவைச் சேர்ந்தவர் என பொலிஸார் அடையாளம் காண்பித்துள்ளனர்.
இரண்டு முறை உட்புகுந்து கொள்ளை செய்ய முயற்சி, ஒரு முறை உட்புகுந்து திருடல், என மேலும் பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
பீட்டர் நொவாசெக் ஒரு 6 அடி 1 அங்குல உயரம், தடித்த உடற்கட்டமைப்புடன், குறுகிய கருப்பு தலைமுடியுடன் இருப்பதாகக் கூறப்படுகிறது.