இந்தியாவில் 3 ஆவது அலை ஏற்படுவதை தடுக்க முடியாது; விஞ்ஞானிகள் எச்சரிக்கை
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு எதிராக தடுப்பூசி போடுவதை அதிகரிக்காவிட்டால் 3 ஆவது அலை ஏற்படுவதை தடுக்க முடியாது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.
கொரோனா தொற்றுக்கான விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படாவிட்டால் இந்தியாவில் அடுத்த 6-8 வாரங்களில் 3ஆவது அலை ஏற்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ச்சியாக புதிய பிறழ்வுகளாக உருமாறி வருகின்ற நிலையில், அடுத்த அடுத்த அலைகளுக்கு தயாராக இருக்க வேண்டியது அவசியம் எனவும் மூத்த மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
எனினும் அங்கு தற்போது கொரோனா தொற்றின் தாக்கம் குறைவடைந்து சென்றாலும் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் நிலையில் உடல்களை தகனம் செய்வதற்கு இடமின்றி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்தியாவில் மூன்றாவது அலை தாக்குமானால் நிலைமை மேலும் மோசமாகலாம் கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.