இலங்கையில் தாக்கப்பட்ட பொலிஸார்; 6 பேர் கைது
பொலிஸாருக்கு இடையூறு விளைவித்து காயப்படுத்திய குற்றச்சாட்டின் பெயரில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி தர்மபுரம் பிறமந்தாரு பகுதியில் இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலை சமாளிக்க சென்ற பொலிஸாரை சந்தேக நபர்கள் தாக்கியுள்ளனர். இதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் பலத்த காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மேலும் தாக்குதல் நடத்திய நபர்களை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் ராஜகிரியவில் கட்டட நிர்மாணப் பணியில் ஈடுபட்டிருந்த 6 பேர் குற்றப்பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.