ஈரானுக்கு எதிரான நடவடிக்கை ; அமெரிக்க வீரர்கள் காயம் தொடர்பில் புதிய தகவல்
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் இதுவரை 624க்கும் மேற்பட்ட அமெரிக்க வீரர்கள் காயமடைந்துள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களமான பென்டகன் அறிவித்துள்ளது.
அமைதி உடன்படிக்கை முறிந்ததைத் தொடர்ந்து இரு தரப்பிற்கும் இடையே மோதல்கள் நீடித்து வரும் நிலையில், பலியான மற்றும் காயமடைந்த வீரர்களின் புள்ளிவிபரங்களை பென்டகன் இரகசியமாக மாற்றியமைத்து வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

பலியான வீரர்களின் பட்டியலை "வெளிநாட்டு நடவடிக்கைகள்" என்ற புதிய பிரிவின் கீழ் வகைப்படுத்தி பென்டகன் வெளியிட்டுள்ள தரவுகள், போரின் உண்மைத் தன்மையை மறைக்கும் முயற்சி என முன்னாள் இராணுவ அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
எனினும், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இணையதளத் தரவுகளில் மாற்றம் ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள பென்டகன், அதனைச் சரிசெய்யும் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் விளக்கமளித்துள்ளது.