பிரிட்டிஷ கொலம்பியாவில் காட்டுத் தீயில் வீடுகள் தீக்கிரை
பிரிட்டிஷ கொலம்பியாவில் ஏற்பட்ட காட்டுத் தீ காரணமாக ஆறு வீடுகள் தீக்கிரையாகியுள்ளன.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லைட்டன் மேற்கு பகுதியில் இவ்வாறு வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நாளுக்கு நாள் நிலைமைகள் மோசமடைந்து செல்வதாகவும், இரண்டு கிலோ மீற்றர் வரையில் தீ பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத் தீ பரவுகை காரணமாக மின்சாரம் இல்லை எனவும் நீர் இல்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
பிராசர் நதிக்கு அருகாமையில் இந்த கிராமம் அம்ம்நதுள்ளதாகவும் பொருட்களை ஒரு கரையிலிருந்து மறு கரைக்கு எடுத்துச் செல்ல முடியாதிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
காட்டுத் தீ காரணமாக பெரும் எண்ணிக்கையிலான கிராம மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் இதுவரையில் சுமார் 15 சதுர கிலோ மீற்றர் பரப்பில் தீ பரவிக் கொண்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.