இறுதி ஊர்வலத்தில் வெடித்த கலவரத்தில் 71 பேருக்கு நேர்ந்த கதி!
ஜெருசலேமில் இறுதி ஊர்வலத்தில் வெடித்த மோதலின் போது 71 பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
டெம்பிள் மவுண்டில் நடந்த மோதலின் போது இறந்த பாலஸ்தீனியர் வாலித் அ-ஷரீப்பின் இறுதி ஊர்வலத்தைத் தொடர்ந்து இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இறுதி ஊர்வலத்தில் துக்கத்தில் இருந்தவர்களை தடுத்து நிறுத்துவதற்கு இஸ்ரேலிய பொலிஸார் ஸ்டன் கையெறி குண்டுகள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் கலவரம் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
இதன்போது ஏற்பட்ட மோதலில் 71 பாலஸ்தீனியர்கள் காயமடைந்ததாகவும், அவர்களில் 13 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பாலஸ்தீனிய செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
அதேவேளை கடந்த மாதம் ஜெருசலேத்தில் உள்ள டெம்பிள் மவுண்டில் இஸ்ரேலிய படைகளுடன் நடந்த மோதலில் ஷெரீப் என்ற நபர் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
இந்நிலையில் அவரது இறுதி ஊர்வலத்தின் போதே இந்த கலவரம் வெடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.