கொரோனாவை விட மிகப்பெரிய நெருக்கடி; ஐநா தூதர் பகீர் தகவல்
ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச் சூழலால் ஏற்படும் இறப்பு விகிதங்கள் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில், இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் கொரோனா நெருக்கடிக்கு சமமான இறப்பு விகிதங்களை சுற்றுச்சூழல் மாசுபாட்டால் உலகம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என இங்கிலாந்து ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் மார்க் கார்னி ஒரு பகீர் தகவலை கூறியுள்ளார்.
மார்க் கார்னி மேலும் கூறுகையில், மில்லியன் கணக்கான இறப்புகளைத் தவிர்க்க தேவையான முதலீடு தற்போதைய நடப்பு விகிதங்களை விட இருமடங்காகும் என்றார்.
ஆனால் அரசாங்கங்கள் பில்லியன்களை பொருளாதாரங்களை மீட்க வைப்பதால், சுற்றுச்சூழல் மீட்பு போதுமானதாக இருக்குமா என்பது ஒரு கேள்விக்குறி தான் எனக் கூறியுள்ளார். இதற்கான பதில் சிறந்த முதலீட்டில் உள்ளதாகவும் கார்னி மேலும் கூறினார். கடந்த ஆண்டு வரை இங்கிலாந்து வங்கி ஆளுநராக இருந்த திரு கார்னி, அதற்கு முன்னர் கனடா வங்கியின் தலைவராக இருந்தார்.
தற்போது அவர் காலநிலை நடவடிக்கை மற்றும் நிதி தொடர்பான ஐக்கிய நாடுகளின் தூதராக உள்ளார். இந்நிலையில் கொரோனா தொற்றுநோய்க்கும் காலநிலை மாற்றத்திற்கும் இடையில் ஒற்றுமைகள் இருந்தபோதிலும், சுற்றுச்சூழல் மாசுபட்டால் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு சேதம் ஏற்படுவதால் இன்னும் பல இறப்புகள் ஏற்படக்கூடும் என்று, அவர் கூறினார்.
“நீங்கள் ஒரு மனித இறப்பு கண்ணோட்டத்தில் காலநிலை மாற்றத்தைப் பார்க்கும்போது, இது இந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஒரு கொரோனா வைரஸ் நெருக்கடிக்கு சமமாக இருக்கும்.
எனவே இந்த பிரச்சினை குறித்து உலக நாடுகள் தற்போதே பேசி தீர்வு காண்பது தான் நல்லது என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
ஆனால் கொரோனாவால் வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரங்களை மீட்பதற்கான தூண்டுதல் திட்டங்களில் டிரில்லியன் கணக்கான டாலர்களை செலவிடும் அரசாங்கங்கள் முக்கியமாக வேலை இழப்புகள் மற்றும் ஊரடங்கால் ஏற்படும் பொருளாதார சேதங்களை நிவர்த்தி செய்கின்றன. அந்த பணத்தில் மிகக் குறைவானது கார்பன் உமிழ்வைக் குறைப்பதை நோக்கிச் செல்கிறது. இருப்பினும் கடந்த ஆண்டில் உமிழ்வு வீழ்ச்சியடைந்துள்ளது. ஏனெனில் மக்கள் அதிகம் பயணம் செய்யவில்லை.
கொள்கை வகுப்பாளர்கள், தலைமை நிர்வாகிகள், வங்கியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சுற்றுச்சூழலில் கவனம் செலுத்துமாறு வற்புறுத்தும் கார்னி, “எரிசக்தி, நிலையான ஆற்றல் மற்றும் நிலையான உள்கட்டமைப்பு ஆகியவற்றில் முதலீட்டு அளவு இரட்டிப்பாக வேண்டும். ஒவ்வொரு ஆண்டும், அடுத்த மூன்று தசாப்தங்களில், ஒரு வருடத்திற்கு 3.5 டிரில்லியன் டாலர் என 30 ஆண்டுகள் முதலீடு செய்யப்பட வேண்டும்.
இது ஒரு மகத்தான முதலீட்டு வாய்ப்பு.” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.