தீயணைப்பு வாகனத்தின் மீது மோதிய விமானம் ; அலறிய பயணிகள் (Video)
பெரு நாட்டின் தலைநகர் லிமா விமான நிலையத்தில் இருந்து 102 பயணிகளுடன் உள்ளூர் விமானம் ஒன்று புறப்பட்டது. விமானம் ஓடு பாதையில் இருந்து மேலே எழும்ப வேகமாக சென்றது.
அப்போது ஓடுதளத்தில் சென்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதியது. இதனால் விமானத்தை விமானிகள் நிறுத்த முயற்சித்த நிலையில் ஓடு பாதையில் விமானம் தீப்பொறிகள் பறந்தபடியும், கரும்புகை வெளியேறியவாறும் பல அடி தூரம் சென்று நின்றது.
விமானத்தில் இருந்து பயணிகள் பீதியில் அலறினார்கள். உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விமானத்தில் எரிந்த தீயை அணைத்து விமானத்துக்குள் இருந்த பயணிகள் மற்றும் ஊழியர்களை பத்திரமாக மீட்டனர். இந்த விபத்தில் தீயணைப்பு படையை சேர்ந்த 2 பேர் உயிரிழந்தனர்.
In PERU ??
— -??|??- (@KINGDEMANACATOS) November 19, 2022
A #LATAM Airlines plane taking off from Lima's international airport struck a firetruck on the runway and caught fire on Saturday. Authorities said the plane's passengers and crew were all safe, but two firefighters in the truck were killed. #Twitter #latamperu pic.twitter.com/ErXhhwvwZ5
இந்த விபத்து குறித்து அதிகாரிகள் கூறுகையில், , "உள்நாட்டு விமானம் ஓடு பாதையில் புறப்பட்ட போது தீயணைப்பு வாகனத்தில் எதிர்பாராதவிதமாக மோதியது.
இந்த விபத்தில் தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்தனர்.
எனினும் பயணிகள், விமான ஊழியர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை இடம்பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.