மீண்டும் உலகை அச்சுறுத்தும் வைரஸ்! வெளியான அதிர்ச்சி தகவல்
சீனாவில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் உருவான கொரோனா என்ற கொடூர நோய் உலக நாடுகள் முழுவதும் பரவி இலட்சக்கணக்கான மக்கள் உயிரை பறித்தது.
அதனைத் தொடந்து தற்போது சீனாவை அச்சுறுத்தும் வகையில் கொரோனா போன்ற மற்றொரு கொடூர தொற்று நோய் மீண்டும் பரவ வாய்ப்பு இருப்பதாக அந்நாட்டின் தொற்று நோய் நிபுணர் ஹி சென்க்ஸ் தெரிவித்துள்ளார்.
எச்சரிக்கை விடுத்துள்ள தொற்று நோய் நிபுணர்
வௌவால்கள் மூலம் இந்த பெருந்தொற்று வேகமாக பரவும் என அவர் எச்சரித்து உள்ளார்.
இது தொடர்பாக தொற்று நோய் நிபுணர்கள் நடத்திய ஆய்வின் படி 40 வகையான கொரோனா வைரஸ் மறு உருவாக்கம் பெற்று இருப்பதாகவும், இதில் பாதிக்கு மேல் மிகவும் ஆபத்தானது எனவும் கண்டறியப்பட்டு உள்ளது.
இத்தொற்றில் 3 வகை மீண்டும் ஆபத்தை விளைவிக்கக்கூடியது என்றும் கொரோனா போன்ற தொற்று பரவும் வாய்ப்புகள் அதிகம் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
ஆனால் சில தொற்று நோய் நிபுணர்கள் இதை மறுத்து உள்ளனர். 3 ஆண்டுகளுக்கு பிறகு மறுபடியும் வைரஸ் பரவும் என்பதை ஏற்க முடியாது.
பொதுமக்களின் பாதுகாப்பு உணர்வே எதிர்காலத்தில் இது போன்ற வைரஸ் பரவலை தடுத்து விடும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.