முழு வறுமைக்கு தள்ளப்படும் அரை மில்லியன் பிரித்தானிய சிறார்கள்
உயரும் பணவீக்கம் காரணமாக பிரித்தானியாவில் குடும்பங்கள் வறுமைக்குத் தள்ளப்படும் கடுமையான சூழல் உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
இதன்பொருட்டு, அடுத்த ஓராண்டில் மட்டும் 500,000 சிறார்கள் முழுமையாக வறுமைக்கு தள்ளப்படக் கூடும் என தெரியவந்துள்ளது.
250,000 குடும்பங்கள் நிர்க்கதியாக இருக்கும் சூழ்நிலையை நாம் எதிர்கொள்ள இருக்கிறோம் எனவும், இதில் பல குடும்பங்கள் ஓய்வூதியம் பெறுபவர்கள் எனவும் முக்கிய அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
புதன்கிழமை வெளியாகவிருக்கும் புதிய புள்ளிவிவரங்களில் பணவீக்கம் 9% என இருக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கிறார்கள், இது பெரும்பாலும் ஏப்ரல் மாதத்தில் எரிசக்தி விலை வரம்பில் 54% அதிகரித்ததன் விளைவாகும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஏற்கனவே உலக அளவில் உணவு பண்டங்களின் விலை கடுமையாக அதிகரிக்கும் எனவும் இது குடும்பங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இங்கிலாந்து வங்கியின் ஆளுநர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
மட்டுமின்றி, உக்ரைன் மீது விளாடிமிர் புடின் படையெடுப்பை தொடங்கிய பின்னர் உக்ரைனில் இருந்து அத்தியாவசிய ஏற்றுமதிகள் 90% சரிவடைந்துள்ளது.
இதனால் கோதுமை மற்றும் சமையல் எண்ணெய் தட்டுப்பாடு உலக சந்தையை கடுமையாக பாதித்துள்ளது.