இறுதி ஊர்வலத்தில் இடம்பெற்ற பயங்கர சம்பவம்! 5 பேர் பரிதாபமாக உயிரிழப்பு
துருக்கியில் இறுதி ஊர்வலத்தின் போது இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தென்கிழக்கு துருக்கியின் கஹ்ராமன்மாராஸ்-ஆண்டிரின் நெடுஞ்சாலையில் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் இறுதி ஊர்வலமும் நடைபெற்றது.
இந்த நிலையில் லொறியின் பிரேக் திடீரென செயலிழந்ததில் கட்டுபாட்டை இழந்து முன்னால் சென்ற கார் மீது மோதியது.
பின்னர் லொறி இறுதி ஊர்வலம் சென்ற கூட்டத்துக்குள் புகுந்ததில் அதில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.
இந்த விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயம் அடைந்த 25 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.