பிரான்ஸ் தலைநகரில் கோர விபத்து: இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!
பிரான்ஸ் தலைநகர் பரிஸில் இன்று காலை பரிசில் இடம்பெற்ற விபத்தொன்றில் 20 வயதுடைய ஒருவர் மரணமடைந்துள்ளார்.
இவ்விபத்து சம்பவம் இன்று காலை 11.15 மணி அளவில் 15 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
évennes வீதிக்கும் Lourmel வீதிக்கும் இடையே மின்சார ஸ்கூட்டரில் பயணித்த இளைஞன் ஒருவன், மகிழுந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானான்.
இவ்விபத்தில் குறித்த இளைஞன் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளார்.
தலைக்கவசத்தில் பட்டி அணியாமல் போனதே இந்த உடனடி உயிரிழப்பிற்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.