ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை
ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர் சுட்டுக்கொலை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான் மட்டுமல்லாமல் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பும் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. குறிப்பாக, கடந்த சில நாட்களாக அந்நாட்டிலுள்ள பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பிரபலமான நபர்களை குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், அந்நாட்டின் கபிசா மாகாணத்தை சேர்ந்த பெண் சமூக ஆர்வலர் பிரஸ்டா கோஹிஸ்டனி (Freshta Kohistan ) பெண் உரிமைகளுக்காக போராடி வருகிறார்.
இவர் அந்நாட்டின் மிகவும் பிரபலமான பெண் உரிமைகள் சமூக ஆர்வலராக இருந்துவந்தார். கபிசா மாகாணத்தின் கோஹிஸ்டன் மாவட்டத்திலுள்ள தனது வீட்டிற்கு வெளியே பிரஸ்டா அவரது சகோதரனுடன் நின்று கொண்டிருந்தபோது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி பிரஸ்டா கோஹிஸ்டனியும் அவரது சகோதரரும் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதேவேளை துப்பாக்கிச்சூடு தாக்குதல் சம்பவத்திற்கு எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் தற்போதுவரை பொறுப்பேற்கவில்லை.
இந்நிலையில் பெண் சமூக ஆர்வலர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு ஆப்கானிஸ்தான் எதிர்க்கட்சி தலைவர் அப்துல்லா அப்துல்லா கண்டனம் தெரிவித்துள்ளார்.