தலிபான்கள் விதித்த புதிய தடையால் கதறி அழும் ஆப்கானிஸ்தான் சிறுமிகள்!
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து பல்வேறு அதிரடி தடைகளை விதித்து வருகின்றது.
இவ்வாறான நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் சிறுமிகள் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்ல தடை உள்ளது.
இந்த நிலையில், 6-ம் வகுப்பு படித்து வரும் சிறுமிகள் இதோடு தாங்கள் மீண்டும் பள்ளிக்குத்திரும்ப போவதில்லை என்று நினைத்து கண்ணீர் வடிக்கிறார்கள்.
டிசம்பர் மாதத்தோடு, பாடசாலைகளில் இறுதியாண்டுத் தேர்வு நடத்தப்பட்டு, விடுமுறை அளிக்கப்படும் என்பதால், காபூலில் உள்ள பிபி ரசியா பாடசாலையில் 6-ம் வகுப்பு படித்து வந்த பஹாரா ருஸ்தம் (13), தனது பாடசாலை வாழ்க்கை முடிந்துவிட்டதாகக் கூறுகிறார்.
இனி ஒருபோதும் அவர் தனது வகுப்பறைக்குத் திரும்பப்போவதில்லை என்பதை நினைத்துக் கதறி அழுகிறார்.
இதனைதொடர்ந்து மற்றொரு மாணவிகள் கூறுகையில், நாங்கள் அனைவரும் ஆறாம் வகுப்பு முடித்துவிட்டோம். அடுத்து ஏழாம் வகுப்பு போக வேண்டும். ஆனால், அது முடியாது. எங்கள் வகுப்பில் பயிலும் சிறுமிகள் அனைவரும் கதறி அழுகிறார்கள்.
இதுபோலவே, மற்றொரு மாணவி, தங்கள் கனவுகள் எல்லாம் வீணாகி போய்விட்டது. இனி நாங்கள் எப்போதுமே சொந்தக் காலில் நிற்க முடியாது.
எனக்கு ஆசிரியராக வேண்டும் என்ற கனவு இருந்தது. ஆனால், இப்போது என்னால் படிக்கவே முடியாது, பள்ளிக்கே செல்ல முடியாது என்ற நிலை உள்ளது என்று சொல்லி கண்ணீர் விடுகிறார்.