வெளிநாடொன்றில் இந்தியப் பெண்ணை கொடூரமாக தாக்கிய ஆப்பிரிக்க பெண்கள்!
நெதர்லாந்தில் இந்திய பெண்ணொருவரை ஆப்பிரிக்க பெண்கள் மூவர் கடுமையாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி பலரது கண்டனங்களையும் பெற்று வருகிறது.
அந்த காணொளியில் இந்தியப் பெண்ணை நோக்கி ஆப்பிரிக்க பெண் ஒருவர் எதிர்ப்பு குரலை எழுப்பினார்.
அதற்கு இந்தியப் பெண்ணும் பதில் கூறுகிறார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் மோதலாக மாறியது.
இந்திய பெண்ணின் கையில் இருந்த கருப்பு கைப்பையை ஆப்பிரிக்க பெண் இழுக்கிறார்.
இந்திய பெண் அதை தடுக்கும் நேரத்தில், ஆப்பிரிக்க பெண் அவரது முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி கடுமையாக தாக்குகிறார்.
ஆப்பிரிக்க பெண்ணுடன் இருந்த மற்ற பெண்களும் தாக்குதலை தடுக்காமல் அவருடன் சேர்ந்து மேலும் இந்தியப் பெண்ணை தாக்கியுள்ளனர்.
An INNOCENT Indian student mobbed by African people (Black people), gets robbed and beaten by the crowd. War between immigrants. ATROCIOUS pic.twitter.com/n1jiN7J9pK
— Epic Rage Fights (@epic_rage_fight) September 6, 2023
இருப்பினும், இந்த சண்டையின் பின்னணியில் உள்ள சரியான காரணம் குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.
இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.