கனடாவில் இருந்து வெளிநாடுகளுக்கு மீண்டும் விமான சேவை: வெளியான முக்கிய அறிவிப்பு
கனடாவில் இருந்து முதன்முறையாக இத்தாலியின் ரோம் பகுதிக்கு அடுத்த மாதம் முதல் விமான சேவையை துவக்க இருப்பதாக ஏர் கனடா அறிவித்துள்ளது.
குறித்த பயணிகள் இத்தாலியில் தனிமைப்படுத்திக்கொள்ள தேவை இல்லை என்றும் ஏர் கனடா தெரிவித்துள்ளது. ஏர் கனடா விமான சேவை நிறுவனத்தின் இணைய பக்கத்தில் வெலியிட்டுள்ள தகவலின் அடிப்படையில்,
ஜூலை 2ம் திகதி முதல் இத்தாலிக்கான விமான சேவை துவங்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும், பயண நேரத்திற்கும் 48 மணி நேரம் முன்னதாக கொரோனா பாதிப்பு இல்லை என்பதை பயணிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும்,
இத்தாலியில் தரையிறங்கியதும் மர்றொருமுறை கொரோனா சோதனை முன்னெடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய இந்த அறிவிப்புக்கு முன்பு, பயண நேரத்திற்கும் மூன்று நாட்களுக்கு முன்னர் கொரோனா சோதனை செய்து கொள்வதுடன் பாதிப்பு இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்,
மட்டுமின்றி 10 நாட்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும், அத்துடன் 10வது நாள் மீண்டும் கொரோனா சோதனை செய்து கொள்ள வேண்டும்.
தற்போது இந்த கட்டுப்பாடுகளில் தளர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இத்தாலிய நிர்வாகமும் ஒப்புதல் அளித்துள்ளதாகவே தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா சோதனை மட்டும் எடுத்துக்கொண்டால் போதும் என்ற விதியுடன் அமெரிக்காவின் பல நகரங்களுக்கு தற்போது விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.