கனடாவில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு 1 மில்லியன் டொலர் வெல்ல வாய்ப்பு
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக் கொண்டவர்களுக்காக லொட்டரி திட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஆல்பர்ட்டா மாகாண முதல்வர் Jason Kenney இது தொடர்பில் வீடியோ ஒன்றையும் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். ஆல்பர்ட்டா மக்கள் பெரும்பாலானவர்கள் மிக விரைவில் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த லொட்டரி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் தடுப்பூசி பெற ஆர்வமாக முன்வந்த மக்கள் தற்போது தயக்கம் காட்டுவதாக கூறப்படுகிறது. கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து விடுபடும் பொருட்டு, மாகாண மக்களில் 70% பேர்கள் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கப்படுகின்றனர்.
Announcing the #OpenForSummer lottery!
— Jason Kenney (@jkenney) June 13, 2021
If you were putting off booking your first vaccine dose, or waiting for a reason to book, here it is:
Your shot is your shot at $1 million.
Book now! https://t.co/oY4ZqAeg1j pic.twitter.com/kSzWCoWz9z
இந்த நிலையிலேயே 18 வயதுக்கு மேற்பட்ட எவர் ஒருவர் தமது முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டாலும், அவர்கள் 1 மில்லியன் டொலர் பரிசு திட்டத்தில் இணைக்கப்படுவார்கள் என முதல்வர் Jason Kenney அறிவித்துள்ளார்.
மேலும், ஆல்பர்ட்டாவில் தடுப்பூசி பெற்றுக்கொண்ட வெளி மாகாண மக்களுக்கும் இந்த 1 மில்லியன் டொலர் பரிசு திட்டத்தில் பங்கேற்கலாம். அவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
சனிக்கிழமை வரையில் ஆல்ப்ர்ட்டா மக்களில் 68.5% பேர்கள் தங்கள் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்.
மட்டுமின்றி 12 வயதுக்கு மேற்பட்ட 19.2% பேர் முழுமையாக தடுப்பூசி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.