பச்சிளம் குழந்தைக்காக ஒன்ராறியோவில் விடுக்கப்பட்ட அம்பர் எச்சரிக்கை
ஒட்டாவா பகுதியில் இருந்து கடத்திச் செல்லப்பட்ட 11 மாத பச்சிளம் குழந்தைக்காக ஒன்ராறியோவில் அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாலை 3.50 மணிக்கு ஒட்டாவா பொலிசாரின் கோரிக்கையை ஏற்று, அதிகாரிகள் பிறந்து 11 மாதமேயான Abby Mathewsie தொடர்பில் அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மிரியம் என்ற பெண்மணியால் நள்ளிரவு 1.55 மணிக்கு பினெக்ரெஸ்ட் சாலை மற்றும் கார்லிங் அவென்யூ பகுதியில் இருந்து குழந்தை கடத்தப்பட்டுள்ளார்.
மாயமான குழந்தை அதன் பாட்டியாருடன் இருப்பதாகவும், அவரே கடத்தியிருக்கலாம் எனவும் முதலில் பொலிசார் தெரிவித்திருந்தனர்.
ஆனால் சுமார் 6.30 மணியளவில் ஒட்டாவா பொலிசார் அந்த தகவலை திருத்தியதுடன், குழந்தை அதன் பாட்டியாருடன் இல்லை என்பதை உறுதி செய்துள்ளனர்.
வெள்ளிக்கிழமை அதிகாலை குழந்தை கடத்திச் செல்லப்பட்ட அதே பகுதியிலேயே கடைசியாக வியாழக்கிழமை தனது தாயாருடன் காணப்பட்டுள்ளார்.
குழந்தை தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் உடனடியாக 911 என்ற இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.