அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி குறித்து ஆய்வில் வெளிவந்த அதிமுக்கிய தகவல்
அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசியின் மூன்றாவது டோஸ் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்திருப்பது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக போடப்படும் தடுப்பூசிகளில் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா நிறுவனங்கள் தயாரித்த தடுப்பூசியும் ஒன்று.
இந்த தடுப்பூசியின் 2 டோஸ்கள் போடப்பட்டு வரும் நிலையில், 3வது டோஸ் போட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில், 3-வது டோஸ் போடப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இன்னும் வலிமையாகி இருப்பதுடன், கொரோனாவின் எத்தகையை மாறுபாட்டையும் எதிர்கொள்ளும் வலிமை பெற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் நேரத்தில் இந்த தடுப்பூசியை ஒரு நோயெதிர்ப்பு உந்து சக்திக்கான ஆயுதமாக பயன்படுத்தலாம் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
எனவே இது புதிய வைரஸ் திரிபுகளை எதிர்கொள்ள பேருதவியாக இருக்கும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.