உலகப்புகழ் பெற்ற புத்தாண்டு வாண வேடிக்கையை காண முடியாத நிலையில் மக்கள்!
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள துறைமுக பாலப் பகுதியில் ஒவ்வொரு புத்தாண்டு இரவு வேளையிலும் நடைபெறும் வாண வேடிக்கை உலகப்புகழ் பெற்றதாகும்.
ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள துறைமுக பாலப் பகுதியில் ஒவ்வொரு புத்தாண்டு இரவு வேளையிலும் நடைபெறும் வாண வேடிக்கை உலகப்புகழ் பெற்றதாகும். இதை நேரில் காண சுமார் 10 லட்சம் மக்கள் வரை கூடுவார்கள்.
இந்நிலையில், இந்த ஆண்டு வழக்கம்போல் இங்கு வாண வேடிக்கை நடைபெறும் என்றாலும், கொரோனா தொற்று அபாயம் காரணமாக மக்கள் அப்பகுதியில் திரளாகக் கூடி நேரில் காண்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சிட்னி நகரம் அடங்கிய நியூ சவுத் வேல்ஸ் மாகாண முதல்வர் கிளாடிஸ் பெரிஜிக்லியான், சிட்னி நகரமையப் பகுதியில் வசிப்பவர்கள் புத்தாண்டைக் கொண்டாட தலா 10 விருந்தினர்களை அழைத்துக் கொள்ளலாம்.
ஆனால் அவர்கள் இப்பகுதிக்கு வருவதற்கு முன்கூட்டியே அனுமதி பெற வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய நகரான சிட்னியில் புதிதாக 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு கடந்த 10-ந் தேதி முதல் இத்தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 126 ஆக அதிகரித்துள்ளது.