விற்பனையில் சக்கைப்போடு போட்ட கால்பந்தாட்ட வீரரின் சுயசரிதை
Bondy வீரன் என அழைக்கப்படும், நட்சத்திர உதைப்பந்தாட்ட வீரர் Kylian Mbappé இன் சுயசரிதை புத்தகம் விற்பனையில் சக்கைபோடு போடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘Je m’appelle Kylian’ என பெயரிடப்பட்ட இந்த புத்தகமானது காமிக்ஸ் வடிவில் உருவாக்கப்பட்டதாகும். இந்த நாவலை தனது வாழ்க்கையின் தொடக்கம் முதல் தற்போது வரை இடம்பெற்ற சம்பவம் வரையில் விறுவிறுப்பாக தொகுத்துள்ளார்.
கடந்த நவம்பர் மாதம் 11 ஆம் திகதி அன்று விற்பனைக்கு வந்த இந்த புத்தகம் 1,60,000 பிரதிகள் விற்று சாதனை படைத்துள்ளது. புதன்கிழமை Bondy, Seine-Saint-Denis நகருக்கு வருகை தந்த Kylian Mbappé, தனது புத்தகத்தினை அங்கு வசிக்கும் சிறுவர்களுக்கு அறிமுகம் செய்தார்.
அப்போது அவர் கூறியதாவது,
நான் ஒன்றும் வேற்று நபர் அல்ல இங்கிருந்து தான் தனது வாழ்க்கை தொடங்கியதாக தந்து பதின் பருவ காலத்தை நினைவு படுத்தினர். மேலும் கூறியதாவது, சிறு வயதில் நான் கண்ட கனவானது பலகட்ட போராட்டத்திற்கு பிறகு தான் நிகழ்ந்தது. அதனால் சிறுவர்களை நான் தேடி வந்துள்ளேன். அதனாலயே பெரியவர்களுக்கான புத்தகம் தயாரிக்காமல் , சிறுவர்களுக்காக தயாரித்தேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.