உக்ரைன் ஜனாதிபதி கையொப்பமிட்ட பேஸ்போல் ஏலத்தில்…
உக்ரைன் ஜனாதிபதி வொலாடிமிர் ஸெலன்ஸ்கீ கையொப்பமிட்ட பேஸ்போல் பந்து பந்து ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இந்த பேஸ்போல் பந்து ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது.
கடந்த 2019ம் ஆண்டில் ஸெலன்ஸ்கீ இந்த பேஸ்போல் பந்தில் கையொப்பமிட்டிருந்தார். றோவ்லிங் மேஜர் லீக் பேஸ்போல் போட்டித் தொடரின் பேஸ்போல் பந்து ஒன்றே இவ்வாறு விற்பனை செய்யப்பட உள்ளது.
உலகத் தலைவர்களினால் கையொப்பமிடப்படும் பேஸ்போல் பந்துகள் நினைவுச் சின்னங்களாக பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நினைவுச் சின்னங்களை திரட்டுவோர் ஏல விற்பனைகளில் கூடுதல் தொகை செலுத்தி பொருட்களை கொள்வனவு செய்வது வழமையானதாகும்.
இந்த பேஸ்போல் பந்து பொஸ்டனில் ஏல விற்பனைக்கு விடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பேஸ்போல் பந்தின் அடிப்படை ஏல விற்பனை விலை 15000 அமெரிக்க டொலர்கள் எனவும், இந்த தொகையை விடவும் கூகூடுதல் தொகைக்கு பேஸ்போல் விற்பனை செய்யப்படும் எனவும் நம்பிக்கை வெளியிடப்பட உள்ளது.