ஆப்கானில் ஐ.நா. அமைப்பு பணியாளர்கள் சென்ற வாகனம் மீது நடந்த தாக்குதல்! ஐவருக்கு நேர்ந்த பரிதாபம்
ஆப்கானிஸ்தானில் ஐ.நா. அமைப்பு பணியாளர்கள் சென்ற வாகனம் மீது நடந்த தாக்குதலில் 5 பேர் பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டில் அதிபர் அஷ்ரப் கனி தலைமையிலான அரசு நடந்து வருகிறது.
தலீபான் பயங்கரவாதிகளால் அந்நாட்டு மக்கள் பல்வேறு துயரங்களை சந்தித்து வருகின்றனர். அந்நாட்டின் தலைநகர் காபூலில் சுரோபி மாவட்டத்தில் காபூல்-ஜலாலாபாத் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த வாகனம் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் பணியாளர்கள் சென்று கொண்டிருந்தனர். இந்த தாக்குதலில் அந்த அமைப்பின் பணியாளர்கள் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலுக்கு ஐ.நா.வின் ஆப்கானிஸ்தானுக்கான உதவி இயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. எனினும், இந்த தாக்குதலில் ஐ.நா. அமைப்பின் அதிகாரிகள் யாரும் காயமடையவில்லை என்றும் தெரிவித்து உள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்தவொரு அமைப்பும் உடனடியாக பொறுப்பேற்க முன்வரவில்லை.