சளியை கரைத்து வெளியேற்ற உதவும் பூண்டு பால் ! தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் நல்ல பயன் கிடைக்கும்
Fever
Cold
Mucus
By Kishanthini
பொதுவாக சளி என்பது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் அடிக்கடி வரக் கூடிய ஒன்று தான்.
ஆனால் இந்த நெஞ்சு சளி என்பது சற்று ஆபத்து. ஏனெனில் நெஞ்சு சளி இருக்கிறது என்பதும் கூட மிக தாமதமாக தான் வெளிப்படும்.
நெஞ்சுசளியை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதனை நீக்குவது என்பது மிகவும் எளிதான ஒன்று. இதற்கு ஒரு சில இயற்கை பொருட்கள் பெரிதும் உதவியாக இருக்கின்றது. அதில் ஒன்று தான் பூண்டு.
இதனை எப்படி எஎடுத்து கொள்ளலாம் என்பதை பார்ப்போம்.
தேவையானவை
- பசும்பால்- 200 மில்லி
- தண்ணீர் - அரை டம்ளர்
- பூண்டு பல் - 7
- மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
- மிளகு தூள் - கால் டீஸ்பூன்
- பனங்கற்கண்டு - தேவையான அளவு
செய்முறை
- முதலில் பாலில் தண்ணீரை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு பூண்டு பல்லை தோலுரித்து பாலில் போட்டு வேகவிடவும். பூண்டு பற்கள் வெந்த பிறகு அதனை இறக்கி மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்க்கவும்.
- பிறகு தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.
தினமும் இரவு படுக்கைக்கு செல்லும் முன்பு இந்த பூண்டு பாலை குடித்து வரவேண்டும்.
- இரவு உணவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து பாலை குடிக்க வேண்டும். பால் குடித்த பிறகு வேறு எதையும் சாப்பிட கூடாது.
- இந்த பூண்டு பாலை குழந்தைகளுக்கு கொடுப்பதாக இருந்தால் பூண்டின் அளவை குறைத்துக்கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுக்கக்கூடாது.
- இந்த பூண்டு பாலை தொடர்ந்து 21 நாட்கள் குடித்து வந்தால் நெஞ்சு சளியை அகற்றி சளியை முழுவதுமாக வெளியேற்றும்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US