பெற்றோரின் விவாகரத்து... மகனுக்கு பயந்து படுக்கையறையில் ஒளியும் தாயார்: நால்வர் கொலையில் சிக்கிய இளைஞரின் பகீர் பின்னணி
பெற்றோரின் விவாகரத்து, தாயார் மீதான வெறுப்பு உள்ளிட்ட காரணங்களே, இஸ்லாமியர்கள் நால்வர் கொலையில் கைதான இளைஞரை கட்டுப்பாடற்றவராக மாற்றியிருக்கலாம் என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
கனடாவை மொத்தமாக உலுக்கிய இஸ்லாமியர்கள் நால்வர் கொலை வழக்கில் 20 வயதான Nathaniel Veltman இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2016ல் Nathaniel Veltman தொடர்பில் ஒன்ராறியோ நீதிமன்றத்தில் பதிவான ஆவணம் தற்போது மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அதில், பெற்றோரின் விவாகரத்துக்கு பின்னரே, Nathaniel Veltman ஒருவித மோதல் போக்கை பின்பற்றியதாகவும், அதிகம் வாக்குவாதத்தில் ஈடுபடுபவராக மாறியதாகவும் தெரிய வந்துள்ளது.
பெற்றோரின் விவாகரத்துக்கு முதன்மை காரணம் தமது தாயார் என்றே Veltman குற்றப்படுத்தி வந்துள்ளார். இதனால் மகனுக்கு பயந்து அந்த தாயார் படுக்கையறையில் ஒளிந்து கொள்ளும் சூழலும் உருவாகியுள்ளது.
மேலும், உளவியல் ரீதியாக பாதிக்கப்பட்ட Veltman, தொடர்ந்து சிகிசையில் ஏற்பட்டதாகவும் நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, பெற்றோரின் விவாகரத்துக்கு பின்னர், Veltman வீட்டைவிட்டு வெளியேறி, பண்ணை ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இனவாதம் தொடர்பிலான எந்த கருத்தும் Veltman தொடர்பில் அந்த ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை.
ஆனால், பல கேள்விகளுக்கு அந்த ஆவணங்களில் பதில் இல்லை என்றே நிபுணர்கள் தரப்பு தற்போது சுட்டிக்காட்டியுள்ளனர். இந்த நிலையில், குயின்ஸ் பல்கலைக்கழகத்தின் அமர்நாத் அமரசிங்கம் இந்த விவகாரம் தொடர்பில் தெரிவிக்கையில்,
மில்லியன் கணக்கான குழந்தைகளுக்கு விவாகரத்து பெற்ற பெற்றோர்கள் உள்ளனர், மேலும் மில்லியன் கணக்கான மக்கள் மனச்சோர்வு மற்றும் தற்கொலை எண்ணத்தை அனுபவிக்கிறார்கள், அவர்கள் அப்பாவி மக்களுக்கு எதிரான வன்முறையில் ஈடுபட்டதாக தெரியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
அவருக்கான பின்னணி இந்த கொலையை செய்யத் தூண்டியதாக நம்ப முடியவில்லை. மட்டுமின்றி, கண்டிப்பாக அவருக்கு தனிப்பட்ட காரணங்கள் இருக்கும் என்றே நம்புவதாக அமர்நாத் அமரசிங்கம் தெரிவித்துள்ளார்.