கனடாவில் குருதிக்கு தட்டுப்பாடு?
கனடாவில் குருதிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு குருதிச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
குருதிக் கொடையாளர்கள் தானம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய தேசிய குருதி வங்கியின் குருதிக் கையிருப்பு ஏப்ரல் மாத ஆரம்பம் முதல் 25 வீதத்தினால் குறைவடைந்துள்ளது.
அனைத்து வகையான குருதிப் பிரிவுகளைச் சேர்ந்தவர்களும் தானம் வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று அலைகள் தாக்கிய காலங்களிலும் குருதிக் கொடையாளிகள் தானம் வழங்கியிருந்தனர் எனவும், மார்ச் மாத நடுப்பகுதியிலிருந்து குருதிக் கொடையாளிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடனாவில் இரண்டு பேரில் ஒருவர் குருதி தானம் வழங்க தகுதியுடையவர்கள் என்ற போதிலும் 81 பேரில் ஒருவரே தானம் வழங்குவதாக குருதிச் சேவை நிறுவனத்தின் துணைத் தலைவர் ரிக் பின்ஸன் தெரிவித்துள்ளார்.
குருதிக் கொடையாளிகளின் ஒத்துழைப்பினை பெரிதும் வரவேற்பதாகவும் தொடர்ச்சியாக தானம் வழங்குமாறும் அவர் கோரியுள்ளார்.