ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே தீப்பற்றி எரிந்த படகு ; இந்திய மாலுமி பலி
ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஒரு மரப் படகு தீப்பிடித்ததில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,
வெள்ளிக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மேலும் பதினேழு இந்தியப் படகு ஊழியர்கள் மீட்கப்பட்டதாகவும், தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்பட்டு வருவதாகவும் அவர்கள் கூறினார்.

அப்பகுதியில் சென்றுகொண்டிருந்த ஒரு கப்பல் மூலம் படகு ஊழியர்கள் மீட்கப்பட்டதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
பாரசீக வளைகுடாவிற்கும் ஓமான் வளைகுடாவிற்கும் இடையேயான ஒரு முக்கிய கடல்வழிப் பாதையான ஹோர்முஸ் ஜலசந்தியில், ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையே அதிகரித்து வரும் விரோதப் போக்குவரத்திற்கு மத்தியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உலகின் எண்ணெய் விநியோகத்தில் கணிசமான பகுதி இந்தப் பாதை வழியாகவே செல்கிறது.