கனடாவில் படகு வாங்கச் சென்ற பெண்ணுக்கு லொத்தரில் அடித்த அதிர்ஸ்டம்
படகு வாங்குவதற்காகச் சென்று லொத்தர் வாங்கிச் சுரண்டிய பெண் ஒரே நாளில் கோடீஸ்வரியாகியுள்ளார்.
கனடாவின் கால்கரியைச் சேர்ந்த Pam Millage என்ற பெண், kayak என்னும் சிறு படகொன்றை வாங்கச் சென்றுள்ளார்.
அப்போது அவர் ஒரு லொட்டரிச்சீட்டும் வாங்கியுள்ளார். உடனே அவர் அதனை சுரண்டி தனக்கு ஏதாவது பரிசு விழுந்துள்ளதா என பார்த்துள்ளார்.
அப்போது அந்தப் பெண்ணுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அவர் வாங்கிய லொட்டரிச்சீட்டுக்கு ஒரு மில்லியன் கனேடிய டொலர்கள் பரிசு விழுந்துள்ளது.
ஒரு மில்லியன் கனேடிய டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 21,95,00,244.00 ரூபாவாகும்.
சிறிய படகொன்றை வாங்கச் சென்ற பெண்ணுக்கு ஒரே நாளில் தனக்கு அதிர்ஷ்டம் அடித்துள்ளதை எண்ணி உச்சக்கட்ட மகிழ்ச்சியடைந்துள்ளார்.
பின்னர் தான் ஒரே நாளில் கோடீஸ்வரியாகிவிட்டாலும் இப்போதைக்கு பெரிதாக திட்டங்கள் எதுவும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் சமீபத்தில் தான் தனது மகனுடைய கார் பழுதானதாகவும், அதனால் மகனுக்கு உதவி செய்ய இருப்பதாகவும் மேலும் கணவருடன் வெளிநாட்டு சுற்றுலா செல்லும் ஆசை உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.