உகாண்டாவில் வெடிகுண்டு தாக்குதல்! நூலிழையில் உயிர் தப்பிய 9 தமிழக வீரர்கள் உள்பட 54 இந்திய வீரர்கள்
உகாண்டாவின் தலைநகர் கம்பாலாவில் நேற்று அடுத்தடுத்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது.
உகாண்டா தலைநகர் - கம்பாலாவில் உலக பாராலிம்பிக் பேட்மிண்டன் போட்டிகள் நடைபெற்றன. இதற்காக தமிழக வீரர்கள் 9 பேர் உள்பட 54 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அங்கு சென்றிருந்தது.
இந்திய வீரர்கள் தங்கி இருந்த விடுதியில் இருந்து 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் தொலைவில்தான் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்த குண்டுவெடிப்பு சம்பவங்களில் இந்திய வீரர்கள் அனைவரும் உயிர் தப்பி பாதுகாப்பாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அங்கிருந்து சமூகவலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் இந்த வெடிகுண்டு சம்பவ வீடியோக்களையும் இந்திய விளையாட்டு வீரர்கள் ட்விட்டர் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Indian Team is Safe!There is multiple Bomb Blast 100 mtr away from official Hotel in which @parabadmintonIN team staying incl. @GauravParaCoach
— Para-Badminton India (@parabadmintonIN) November 16, 2021
& @PramodBhagat83 @manojsarkar07@joshimanasi11@IndiainUganda@Media_SAI @ParalympicIndia @YASMinistry @IndiaSports @PMOIndia https://t.co/bAlsNdK4XS pic.twitter.com/TldWuwlXUn