காபூலில் அமைந்துள்ள பகுதியொன்றில் பயங்கர குண்டுவெடிப்பு! 100க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் அச்சத்துடன் அடைக்கலம்
ஆப்கான் தலைநகரான காபூலில் குருதுவாரா கர்த்தே பர்வான் எனுமிடத்தில் பயங்கர குண்டு வெடிப்பு நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சீக்கியர்களை குறிவைத்து நடைபெற்ற இத்தாக்குதலால் பெரும் குழப்பமும் பதற்றமும் நீடிப்பதாக கூறபப்படுகின்றது.
100க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் குருதுவாராவில் அடைக்கலம் புகுந்து அச்சத்துடன் அடைந்துகிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியை பொலிசார் சுற்றி வளைத்து பாதுகாப்பு அரண் அமைத்துள்ளனர்.
மேலும் குண்டு வெடிப்பு தொடர்பான உயிரிழப்பு, சேத விபரபங்கள் பற்றி இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.