பாலஸ்தீன ஆதரவுப் பேரணியில் குண்டுவெடிப்பு; 7 பேர் பலி
பாகிஸ்தானில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற பேரணியில் குண்டுவெடித்ததில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலை கண்டித்து பல்வேறு இஸ்லாமிய நாடுகளில் போராட்டங்கள் நடைபெற்று வந்த நிலையில், பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே பாகிஸ்தானில் போராட்டங்கள் மற்றும் பேரணிகள் நடைபெற்றன.
குறிப்பாக, பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்திலுள்ள ஷாமேன் என்ற நகரிலும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு பேரணியில் ஈடுபட்டனர்.
குறித்த ஆதரவுப் பேரணி போஹ்ரா சவுக் என்ற இடத்தில் உள்ள சந்தைபகுதி அருகே வந்தபோது அங்கு வெடிகுண்டுகளுடன் நிரப்பப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வெடித்து சிதறியதில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்ததுடன் 14 பேர் படுகாயமடைந்தனர்.
இதேவேளை, ஆப்கானிஸ் எல்லையோரம் அமைந்துள்ள பலூசிஸ்தான் மாகாணத்தில் பல ஆண்டுகளாக பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.